Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விருந்துக்கு சென்று விருந்தாகிய இளம்பெண்: அயோக்கியனின் வெறிச்செயல்

விருந்துக்கு சென்று விருந்தாகிய இளம்பெண்: அயோக்கியனின் வெறிச்செயல்
, வியாழன், 15 நவம்பர் 2018 (14:51 IST)
தஞ்சையில் விருந்துக்கு சென்ற இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் உள்ள துணிக்கடையில் ரம்யா என்ற பெண் ஒருவர் வேலை புரிந்து வந்தார். அப்பா இல்லாத அந்த பெண் தன் குடுமபத்தை கவனித்து வந்தார். அவர் பணிபுரியும் கடைக்கு, கடை உரிமையாளரின் நண்பர் சின்னப்பா என்பவன் அடிக்கடி வந்துள்ளான்.
 
அங்கு பணிபுரியும் பெண்களிடம் யோக்கியன் மாதிரி பேசி, நீங்கள் என் மகள் போன்றவர்கள் என்றெல்லாம் இஷ்டத்திற்கும் பேசியுள்ளான். இவன் ஒரு காம மிருகம் என்று அந்த பெண்களுக்கு அப்போது தெரியவில்லை.
 
சமீபத்தில் அயோக்கியன் சின்னப்பா ரம்யாவை தன் வீட்டிற்கு விருந்துக்கு வருமாறு கூறியுள்ளான். முதலில் நான் வரமாட்டேன் என கூறிய அந்த பெண்ணை தன் யோக்கிய பேச்சு மூலம் தன் வீட்டிற்கு வரவழைத்துள்ளான்.
 
 
வீட்டிற்கு வந்த பெண்ணிற்கு மயக்க மருந்து கலந்த ஜூஸை கொடுத்துள்ளான். அந்த பெண் மயங்கியதும் தன் நண்பர்களுடன் சேர்ந்து, அப்பாவி பெண்ணை சீரழித்துள்ளான்.
 
மயக்கம் தெளிந்ததும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் அந்த அயோக்கியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கூட்டு பலாத்காரம் செய்த பாவிகளையும் போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளபதி 63-ல் முக்கிய வேடத்தில் நடிக்க பிரபல நடிகை தேர்வு