Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி: திருவண்ணாமலை கோவிலில் ஏற்றப்பட்ட மோட்சதீபம்

உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி: திருவண்ணாமலை கோவிலில் ஏற்றப்பட்ட மோட்சதீபம்
, சனி, 16 பிப்ரவரி 2019 (19:59 IST)
காஷ்மீரில் நேற்று முன் தினம் நடந்த பயங்கரவாதிகளில் தாக்குதலுக்கு பலியான இந்திய பாதுகாப்பு படை வீர்ர்களுக்கு இந்திய மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை வீரமரணம் அடைந்த வீரர்களின் ஆன்மா சாந்தியடைய ஜாதி, மத, இன வேறுபாடின்றி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இன்று வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்கள் இன்று தகனம் செய்யப்பட்டபோது ஒருசிலர் உணர்ச்சிப்பெருக்கால் பாகிஸ்தான் கொடிகளை எரிக்கும் சம்பவங்களும் நடந்தது. அதேபோல் வீர்ர்களின் ஆன்மா சாந்தியடைய பல இடங்களில் பிரார்த்தனை கூட்டங்களும் நடந்து வருகின்றன
 
இந்த நிலையில் ராணுவத்தில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள அண்ணாமலையார் சன்னதியில் இன்று மோட்சதீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம் ஏற்றுவதால் உயிர்நீத்த ஆன்மாக்கல் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்று ஒரு ஐதீகம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஷ்மீரில் மீண்டும் தாக்குதல்: இந்திய ராணுவ மேஜர் பலி