Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயற்கையான முறையில் செய்யப்படும் சில வைத்திய குறிப்புகள்....!

இயற்கையான முறையில் செய்யப்படும் சில வைத்திய குறிப்புகள்....!
வெள்ளரிப் பிஞ்சை சருமத்தின் மீது பூசிக்கொள்ளச் சிகப்பழகு பெறுவதுடன் பட்டுப் போன்ற மென்மையும் தரும். இதன் மருத்துவக் குணம் தீப்புண், வெயில் ஆகியவற்றால் ஏற்படும் சரும எரிச்சலைக் குளிரவைக்கும். இதன் சாறு உடலைக் குளிரவைப்பதுடன் சருமத்தை அழகுபடுத்தும்.
ஆரோக்கியம், புத்துணர்ச்சி ஆகியவற்றுடன் முதுமையைத் தடுக்கும் ஆற்றலும்கொண்டது கற்றாழை. சருமப் பிரச்னைகளுக்காகவே கற்றாழை பெரும்பாலும்  பயன்படுகிறது. தோல் அலர்ஜி, அக்கி, அம்மை, அரிப்பு, வெட்டு, சிராய்ப்பு, தீக்காயம் ஆகியவற்றுக்குச் சிறந்த மருந்து கற்றாழை. கற்றாழையின் தண்டில்  சிறப்பான கூட்டுப் பொருட்கள் இருக்கின்றன. இதில் உள்ள வீக்க எதிர்ப்புச் சத்துக்கள் வலியைக் குறைப்பதுடன், தீப்புண், எரிச்சல் மற்றும் அரிப்பைக்  குறைக்கின்றன.
 
வல்லாரையிலும் முதுமை எதிர்ப்பிகள் அதிகம் இருப்பதால் காஸ்மெடிக்ஸ் தயாரிப்பில் முக்கிய அங்கம் வகிக்கிறது. குழந்தை பிறந்த பிறகு வயிறு சுருங்குவதால் ஏற்படும் கோடுகளையும் தீர்க்கவல்லது. எரிச்சல், அரிப்பு ஆகியவற்றை நீக்கிச் சருமத்தைச் சுத்தப்படுத்தி மிருதுவாக வைத்திருக்கும்.
 
ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்த மருந்து துளசி. குறிப்பாக முகப்பரு, முதுமை, பேன், பொடுகு, பூச்சிக் கடி ஆகியவற்றுக்குச் சிறந்த நிவாரணி. கொசுவை விரட்டும்  தன்மை இருப்பதால் கொசு விரட்டிகளில் இது பயன்படுத்துகிறது.
 
ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன், சருமத்துக்குப் புத்துணர்ச்சி ஊட்டி, ஆரோக்கியத்துடன் இயற்கையாக ஒளிரவைக்கும். வீக்கம், பாக்டீரியா மற்றும் முதுமை எதிர்ப்பிகள் இருப்பதால் முகப்பரு, தடிப்பு, கருந்திட்டுகள் மற்றும் சரும நோய்களுக்கான சிறந்த மருந்தாகும். உலர் சருமத்தை மென்மையாக்கிச் சருமம்  விரைவில் முதுமை அடைவதைத் தடுக்கிறது.
 
எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம் தான் வாழைப்பழம்.இதின் பழத்தை தின்று விட்டு தோலை இனி வீசி எறிய வேண்டாம். அதை  நம் தோல் மீது தடவி வந்தால் தோலுக்கான ஊட்டச்சத்து கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எள்ளு பூரணம் கொழுக்கட்டை செய்ய...!