Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருத்துவ குணங்கள் நிறைந்த கடுக்காய்...!

மருத்துவ குணங்கள் நிறைந்த கடுக்காய்...!
கடுக்காய் ஓட்டை தூளாக்கி இரவு உணவு சாப்பிட்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம்  குணமாகும்.
மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம் பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டு வர, ஜீரண சக்தி கூடும். மலச்சிக்கல் மாறும். உடல் பலம்பெறும்.
 
கடுக்காய் தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்துகொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டு  வர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.
 
15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து  முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.
 
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த திரிபலா சூரணத்தை அடிக்கடி நீரில் கலந்து குடிக்க உடல்பலம் ஏற்படும். வயிற்றுக் கோளாறு மாறும்.
 
கடுக்காய்த் துளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து அந்த நீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல் புண் ஆகியன ஆறும்.
 
கடுக்காய் பொடியைத் தேனில் கலந்து ஓர் ஆண்டு முழுவதும் காலைதோறும் சாப்பிட்டு வந்தால், வயோதிகத்தால் வந்த சுருக்கங்களும், முதுமைத்தன்மையும்,  நரையும் நீங்கும்.
 
கடுக்காயைத் துவையல் செய்து சாப்பிட்டால், நாக்கு சுவைகளை அறியாமல் இருப்பது நீங்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு...!