Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோவாவில் கொடூரம்: கணவனை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டிய மனைவி

கோவாவில் கொடூரம்: கணவனை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டிய மனைவி
, புதன், 9 மே 2018 (19:57 IST)
கோவாவில் பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கணவரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
கோவாவில் பசுராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினர் அவரது மனைவி மற்றும் 3 நண்பர்களை கைது செய்துள்ளனர். விசாரணையில் பசுராஜுடன் ஏற்பட்ட தகராறில் அவரது மனைவி அவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது. 
 
பசுராஜை அவரது மனைவி கொலை செய்த பின் அவரது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் 4 பேர் சேர்ந்து பசுராஜ் உடலை துண்டு துண்டாக வெட்டி வீசியுள்ளனர்.
 
இந்த சம்பவம் தொடர்பாக பசுராஜின் நண்பர்களின் ஒருவரது மனைவி கணவரின் நடவடிக்கையில் சந்தேகம் உள்ளதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸாருக்கு திடிக்கிடும் தகவல் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் நான்கு பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 மாதம் காத்திருந்து பழி வாங்கிய பாம்பு