Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாரிடான் மாத்திரை உள்பட இரண்டு மருந்து பொருட்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

சாரிடான் மாத்திரை உள்பட இரண்டு மருந்து பொருட்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி
, திங்கள், 17 செப்டம்பர் 2018 (14:52 IST)
சாரிடான் மாத்திரை உள்பட இரண்டு மருந்து பொருட்கள் விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 
சில மருந்துகள் பொருட்கள் அலட்சியமாக தயாரிக்கப்படுவது சோதனையில் கண்டிபிடிக்கப்பட்டதை அடுத்து 2015ஆம் ஆண்டு அவை தடை செய்யப்பட்டது. இதை எதிர்த்து மருந்து நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. 
 
இந்த வழக்கின் விசாரணையில் மீண்டும் அந்த மருந்து பொருட்களை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மீண்டும் ஆய்வு செய்ததில் 328 வகையான மருந்து பொருட்களை தடை செய்யுமாறு சோதனைக்குழு மத்திய அரசு பரிந்துரை செய்தது.
 
இதில் பெரும்பாலும் நோய் எதிர்ப்பு, வலி நிவாரணி மற்றும் கிருமி நாசினி மருந்துகள் ஆகும். இந்நிலையில் உச்ச நீதிமன்றம் சாரிடான், டார்ட் மற்றும் பிரிட்டான் ஆகிய மூன்று மருந்துகளுக்கு முதற்கட்டமாக தடையை நீக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹெச். ராஜாவை கைது செய்து பழி தீர்க்கும் எடப்பாடி? : இதுதான் காரணமா?