Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டின் மிக உயர்ந்த தலைவரே... பிரகாஷ் ராஜ் நக்கல் டிவிட்!

Webdunia
திங்கள், 18 ஜூன் 2018 (19:17 IST)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஒரு வாரமாக துணை நிலை ஆளுனர் இல்லத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 
 
டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நடத்தி வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர கோரி கடந்த 7 நாட்களாக முதல்வர் கேஜ்ரிவால், அமைச்சர்கள் மணீஷ் ஷிசோடியா, கோபால் ராய், சத்யேந்திர ஜெயின் ஆகியோர் துணை நிலை ஆளுநர் இல்லத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இவருடைய போராட்டத்திற்கு பாஜக அல்லாத முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். தற்போது கேஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் பிரகாஷ் ராஜ் மோடியை டிவிட்டரில் நக்கல் செய்துள்ளார்.
 
அந்த நாட்டின் மிக உயர்ந்த தலைவரே. நீங்கள் உடற்தகுதி சவாலிலும், யோகா, உடற்பயிற்சி செய்வதிலும் மிகவும் பரபரப்பாக இருப்பீர்கள். எங்களுக்காக ஒரு நிமிடம் ஒதுக்குங்கள், ஆழ்ந்து மூச்சு இழுத்துவிட்டுக்கொள்ளுங்கள். உங்களை சுற்றி பார்த்துக்கொள்ளுங்கள்.
 
உங்களின் அதிகாரிகளிடம் கூறி, ஐஏஎஸ் அதிகாரிகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுடன் இணைந்து பணியாற்றக் கூறுங்கள். இதை படித்தபின் உங்களின் உடற்பயிற்சியையும், வேலையையும் கூட செய்யலாம் என்று பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

பச்சை பட்டுடுத்தி தங்க குதிரையில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்! பக்தர்கள் கோவிந்தா கோஷம்..!

செல்போனில் பச்சை நிறக்கோடுகள் இருக்கிறதா.? வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சாம்சங்..!!

கட்சிக்கு எதிராக போர்க்கொடி..! பாஜகவில் இருந்து கே.எஸ். ஈஸ்வரப்பா அதிரடி நீக்கம்..!

வெறுப்பும், பாகுபாடும்தான் மோடியின் உத்தரவாதம்.! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!!

தமிழ்நாட்டில் 14 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments