Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டியின் வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும்; பெட்ரோலியத்துறை அமைச்சர் விருப்பம்

பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டியின் வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும்; பெட்ரோலியத்துறை அமைச்சர் விருப்பம்
, திங்கள், 17 செப்டம்பர் 2018 (18:21 IST)
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என விரும்புவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

 
பெட்ரோல் - டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ரூ.100-ஐ தொடும் நிலையில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பாத இல்லை.
 
ராஜாஸ்தான் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்துள்ளது. இந்நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:-
 
பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டியின் வரம்பிற்குள் கொண்டுவர என்று நான் விரும்புகிறேன். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்தான் இதற்கான முடிவை எடுக்க வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய அரசை விட மாநில அரசுகளுக்கு தான் வலிமை அதிகம் என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடிக்கு பிறந்த நாள் : அரசியல் தலைவர்கள் வாழ்த்து