Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆடு, மாடுகளை பேச வைக்கும் மென்பொருள்: நித்தியானந்தா தகவல்

ஆடு, மாடுகளை பேச வைக்கும் மென்பொருள்: நித்தியானந்தா தகவல்
, செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (19:28 IST)
மனிதர்களை போலவே ஆடு, மாடுகளை மட்டுமின்றி சிங்கம், புலி முதல் குரங்கு  வரை அனைத்து மிருகங்களையும் தன்னால் பேச வைக்க முடியும் என்றும் இதற்கென தான் ஒரு மென்பொருள் உருவாக்கியுள்ளதாகவும் நித்தியானந்தா கூறியுள்ளார்.

சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பிடதி என்ற பகுதியில் உள்ள ஆசிரமம் ஒன்றில் நித்தியானந்தா உரையாடினார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

webdunia
இந்த வீடியோவில் 'மிருகங்களை பேச வைக்கும் மென்பொருள் ஒன்றை உருவாக்கி அதனை சோதனை முறையில் வெற்றி பெற செய்துள்ளதாகவும், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் குரல் வளத்தில் உள்ள ஒருசில வேறுபாடுகளை சரிசெய்துவிட்டால் விலங்குகளை மனிதர்கள் போல் தன்னால் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் பேச வைக்க முடியும் என்றும் நித்தியானந்தா கூறியுள்ளார். இன்னும் ஒரு ஆண்டுக்குள் இதனை செய்து முடிக்க தான் திட்டமிட்டுள்ளதாகவும் நித்தியானந்தா அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் - வீடியோ