Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முடிவுக்கு வந்தது இழுபறி: மபியில் ஆட்சி அமைக்க காங்.க்கு அழைப்பு

முடிவுக்கு வந்தது இழுபறி: மபியில் ஆட்சி அமைக்க காங்.க்கு அழைப்பு
, புதன், 12 டிசம்பர் 2018 (10:56 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் பெரிய மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கர் மாநிலங்களில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைத்துவிட்டது. ஆனால் மத்திய பிரதேசத்தில் இழுபறியாக இருந்து வந்த நிலையில் தற்போது அம்மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது

மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 114 தொகுதிகளும், பாஜகவுக்கு 109 தொகுதிகளும் கிடைத்துள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க 116 தொகுதிகள் தேவை. இந்த நிலையில் முன்று சுயேட்சைகளும், மாயாவதி கட்சியின் இரண்டு எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுத்துள்ளதால் அங்கு காங்கிரஸ் கட்சி அமைக்கின்றது.

webdunia
சற்றுமுன் வெளிவந்த தகவலின்படி மத்திய பிரதேச கவர்னர், காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து இம்மாநிலத்தில் நிலவி வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. மேலும் மத்திய பிரதேசத்தில்  காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல்நாத், திக்விஜய் சிங், ஜோதிராதித்ய சிந்தியா ஆகிய மூவரில் ஒருவர் முதல்வர் பதவியை ஏற்பார்கள் என்று தெரிகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

100 குழந்தைகள் கடத்தல் விவகாரம் : இந்தியா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு