Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாட்டை விட்டு வெளியேறும் முன் அருண்ஜெட்லியை சந்தித்தேன்: விஜய்மல்லையா

நாட்டை விட்டு வெளியேறும் முன் அருண்ஜெட்லியை சந்தித்தேன்: விஜய்மல்லையா
, புதன், 12 செப்டம்பர் 2018 (18:25 IST)
பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் பெற்றுவிட்டு அதனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பிச்சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. அவரை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வரும் நிலையில் விஜய் மல்லையா தான் நாட்டை விட்டு வெளியேறும் முன்னர் நிதியமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்துவிட்டு வந்ததாக புதுகுண்டு ஒன்றை போட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் மல்லையாவை நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசுதான் மறைமுகமாக உதவி செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் விஜய் மல்லையாவின் இந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

webdunia
இதுகுறித்து லண்டனில் விஜய்மல்லையா கூறியபோது, 'நாட்டை விட்டு வெளியே செல்லும் முன்பு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து நிலைமையை சரி செய்ய முயற்சி செய்ததாகவும், வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவது குறித்து அவரிடம் ஆலோசனை செய்ததாகவும் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். இதற்கு நிதியமைச்சர் அருண்ஜெட்லி என்ன பதில் சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜியோவின் அட்டகாசமான ஆஃபர்.