Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு : பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு : பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா
, ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (11:27 IST)
இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத வகையில் பெட்ரோல் – டீசல் விலை  உச்சம் தொட்டது. இந்த விலை உயர்வு பிரச்சனை குறித்து  பா.ஜா.க தேசிய தலைவர்
அமித் ஷா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.


மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முன் எப்போதும் இல்லாத வகையில் ’பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு  ஆகியவற்றைக் கண்டு மத்திய அரசும், பா.ஜ.கவும் கவலையடைந்துள்ளதாக அமித் ஷா கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா, சீனா இடையே நடைபெற்று வருகின்ற  வர்த்தக போர் மற்றும் அமெரிக்காவுக்கும் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு இடையே நிலவுகிற பிரச்சனைகள்தான் பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கான  முக்கிய காரணம்’ இவ்வாறு அவர் பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெற்றோருக்கு எதிராக போராட்டத்தில் குதித்த குழந்தைகள் - காரணம் என்ன?