Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடிப்பாவி இதுக்காகவா 5 பேர அநியாயமா கொன்ன - போலீஸையே அலறவிட்டுட்டியே!

அடிப்பாவி இதுக்காகவா 5 பேர அநியாயமா கொன்ன - போலீஸையே அலறவிட்டுட்டியே!
, சனி, 23 ஜூன் 2018 (11:18 IST)
மகாராஷ்டிராவில் விருந்தில் உணவருந்திய 4 குழந்தைகள் உட்பட 5 பேர் பலியாகிய சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் காலாப்பூர் அருகே உள்ள மகத் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் மானே. இவர் ஒரு புது வீட்டை கட்டினார்.  
 
இந்நிலையில் சுபாஷ் வீட்டின் கிரகப்பிரவேசத்தின்போது விருந்தில் உணவருந்தியவர்ளுக்கு தலைசுற்றல், வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவர்கள் அருகிலிருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 4 குழந்தைகள்  உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். 
webdunia
இந்த சம்பவம் குறித்து காலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சுபாஷ் மானேவின் உறவுக்காரப் பெண்ணான பிரத்னியா குடும்ப சண்டையின் காரணமாக விருந்து சாப்பாட்டில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ந்துபோன போலீஸார், அந்த பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னாள் தென் கொரிய அதிபர் கிம் ஜாங் பில் மரணம்!