Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டி.சி வாங்கச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற ஆசிரியர்

டி.சி வாங்கச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற ஆசிரியர்
, செவ்வாய், 17 ஜூலை 2018 (09:14 IST)
பிளஸ் 2 மாணவி ஒருவர், தான் படித்த ஸ்கூலில் டி.சி வாங்கச் சென்ற போது அந்த பள்ளி ஆசிரியரே அவரை கற்பழிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சிறுமிகள் மீது ஏகப்பட்ட வன்கொடுமைகள் நடந்தேறி வருகின்றன. சிறுமிகளை வன்கொடுமை செய்யும் அயோக்கியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அரசு அறிவித்த போதிலும் இந்த குற்றங்கள் குறைந்த பாடில்லை.
 
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பிளஸ் 2 படிக்கும் பெண் ஒருவர் தான் படித்த பள்ளியில் இருந்து வெளியேற டிசி வாங்க பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியை பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் விஜய் தங்கார் என்பவர் தனி அறைக்கு அழைத்து சென்று அவரை கற்பழிக்க முயன்றுள்ளார்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி சத்தம் போட்டுள்ளார். உடனடியாக அங்கு வந்தவர்கள் அந்த மாணவியை மீட்டனர்.
 
இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அந்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். குழந்தைகளுக்கு அரணாய் இருக்க வேண்டிய ஆசிரியரே இப்படி செய்திருப்பது அப்பகுதி வாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினிக்கு 'நமது அம்மா' நாளிதழ் பாராட்டு.