Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவில் தலைமை காவலர் சுட்டுப் படுகொலை - ரௌடிகள் அட்டுழியம்

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (06:35 IST)
டெல்லியில் நேற்று நள்ளிரவு தலைமைக் காவல் அதிகாரி ஒருவர் மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரௌடிகளில் அட்டூழியங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதுவரை பொதுமக்களை மட்டுமே தாக்கி வந்த அவர்கள் சமீபகாலமாக போலீஸாரையே தாக்குகின்றனர். அப்படி டெல்லியில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது.
 
டெல்லியில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த ராம் அவ்தார் என்பவர் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த மர்ம நபர்கள் ராமை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர். இதில் நிலை குலைந்து போன அவர் சம்பவ இடத்திலே பலியானார். 
 
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு தலைமைக் காவலரே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் டெல்லியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments