Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

70,000 ஊழியர்களின் சம்பளத்தை திரும்பக்கேட்டு எஸ்பிஐ நோட்டீஸ்?

70,000 ஊழியர்களின் சம்பளத்தை திரும்பக்கேட்டு எஸ்பிஐ நோட்டீஸ்?
, புதன், 18 ஜூலை 2018 (14:14 IST)
கடந்த 2017 ஆம் ஆண்டு பிரமரின் அற்விப்பின்படி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்களில் மாற்றிக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது. வங்களும் கூடுதல் நேரம் இயங்கின. 

 
அதன்படி, நவம்பர் 14 ஆம் தேதி முதல் டிசம்பர் 30 ஆம் தேதி வரை வங்கநேரம் முடிந்த பின்னரும் ஊழியர்கள் வேலை பார்த்தனர். இதனால், பணமதிப்பு நீக்கம் காலத்தில் கூடுதல் நேரம் வேலைப்பார்த்ததற்காக ஊழியர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்கப்பட்டது. 
 
தற்போது ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் ஊதியத்தை திரும்பிச் செலுத்தக் கோரி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது கிளை வங்கிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
அதாவது, கூடுதல் நேரம் வேலைபார்த்தமைக்காக ஊழியர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஊதியம், எந்த அடிப்படையில், எந்தச் சூழலில் தரப்பட்டது என்பதை விசாரணை நடத்டி அறிந்துக்கொண்டு தவறாக ஊதியம் கொடுக்கப்பட்டிருந்தால் அதனை திரும்பப்பெரும்படி கூறியுள்ளது. 
 
எனவே, எஸ்பிஐ வங்கியுடன் இணைந்த துணை வங்கிகளை சேர்ந்த 70,000 ஊழியர்களிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டு, பணம் திரும்ப பெறப்பட உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிவி நேரலையில் பெண் வக்கீலை தாக்கிய நபர் கைது