Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்: ஹர்திக் பாண்டியா!

நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்: ஹர்திக் பாண்டியா!
, திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (17:01 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரான கபில் தேவ் சிறந்த் ஆல்ரவுண்டர். தற்போதைய இளம் வீரரான ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் கபில் தேவ் என வர்ணிக்கின்றனர்.
 
இது குறித்து ஹர்திக் பாண்டியா கூறியது பின்வருமாறு, அடுத்த கபில் என என்னை கூறுகிறீர்கள். ஆனால் தவறு நிகழ்ந்து விட்டால் கபில்தேவா, இவரா? என்று கூறுகிறீர்கள். 
 
நான் ஒரு போதும் கபில் ஆகவிரும்பவில்லை, ஹர்திக் பாண்டியாவாகவே இருக்க விரும்புகிறேன். நான் ஹர்திக் பாண்டியாவாகவே 40 ஒருநாள் போட்டிகள் 10 டெஸ்ட் போட்டிகளை ஆடியுள்ளேன், கபில்தேவாக அல்ல. 
 
என்னை கபிலுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். ஒப்பிடாத போது நான் மகிழ்ச்சியாக இருப்பேன். என்னுடைய 2 வது 5 விக்கெட் ஸ்பெல் இது. ஆனால் முதல் 5 விக்கெட்டை விட இது முக்கியமான இடத்தில் முக்கியமான தருணத்தில் வந்துள்ளது.

எனக்கு சதம் அடிப்பதை விட 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்தான் மகிழ்ச்சி உள்ளது என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிய விளையாட்டுப் போட்டி - தங்கம் வென்ற மல்யுத்த வீரருக்கு 3 கோடி பரிசு