Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌விடுகதை‌களை படி‌த்து‌ப் பாரு‌ங்க‌ள்

‌விடுகதை‌களை படி‌த்து‌ப் பாரு‌ங்க‌ள்
, வியாழன், 27 ஆகஸ்ட் 2009 (15:20 IST)
விடுகதைக‌ள் தெ‌ரி‌ந்து கொ‌ள்வது‌ம், அதனை ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் கே‌ட்பது‌ம் ‌மிகவு‌ம் சுவார‌ஸ்யமான ‌விஷய‌ம்தானே?

1. தாய் இனிப்பாள்; மகள் புளிப்பாள்; பேத்தி மணப்பாள். அவர்கள் யார்?
2. கறுப்பு மைதானத்தில் கொளுத்தும் சூட்டிலும் புரண்டு புரண்டு தூங்குது வெள்ளைக் குதிரை. அது என்ன?
3. அழைக்காமல் வரும் விருந்தாளி; ஆளை அலைக்கழிக்காமல் செல்லமாட்டான். அவன் யார்?
4. ஊரெல்லாம் மூடியிருக்கும்; ஊறுகாய் பானை திறந்தே இருக்கும். அது என்ன?
5. சின்னச் சின்ன சாத்தான்; வயிறு பெருத்துச் செத்தான். அவன் யார்?
6. மாமா போட்ட பந்தல்; மறுபடி பிரிச்சா கந்தல். அது என்ன?
7. ஆற்றில் விழுந்தாலும் ஆழ்கடலில் விழுந்தாலும் எ‌ரி‌ந்து கொ‌ண்டே இரு‌ப்பா‌ன். அவன் யார்?

விடைகள்:

1.பால், தயிர், நெய்
2.தோசைக்கல், தோசை
3.நோய்
4.கிணறு
5.பருத்தி
6.சிலந்தி வலை
7.சூரிய ஒளி

Share this Story:

Follow Webdunia tamil