குழந்தைகளா உங்களுக்கான சில பொன்னான மொழிகளை இங்கு அளித்துள்ளோம், படித்துப் பார்த்து புரிந்து கொண்டு அதன்படி வாழுங்கள்.
பொன் மொழிகள்,
உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது. அதை இழக்கும் வரை அதன் மதிப்பு தெரிவதில்லை.
மற்றவர்களின் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி அடையாதவனால் நற்செயல்களை செய்ய இயலாது.
நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெரிய சுமையாகியிருக்கும்.
மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது.
நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.
அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.
எளியாரை வலியார் அடித்தால், வலியாரைத் தெய்வம் அடிக்கும்.
ஊசி முனையில் தவம் செய்தாலும் உன்னதுதான் கிட்டும்.
வியாதிக்கு மருந்து உண்டு, விதிக்கு மருந்த உண்டா
தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்.