குழந்தைகளா இனி ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறளை சொல்லி அதற்கான பொருளையும் உங்களுக்கு அளிக்கிறோம். அதோடு திருக்குறளின் சிறப்பையும் தெரிந்து கொள்வீர்கள்.
திருக்குறளின் சிறப்பு
திருக்குறள் மூன்று பிரிவுகளைக் கொண்டது. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகிய 3 பிரிவுகளாகப் பிரித்து திருவள்ளுவர் திருக்குறளை இயற்றியுள்ளார்.
திருக்குறளை இயற்றியது திருவள்ளுவர்.
கடவுள் வாழ்த்து
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். 2
ஒருவர் கற்ற கல்வியின் பயனாக, தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால் அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயனென்ன