Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கதை சொ‌ல்‌கிறோ‌ம், ‌நீ‌தியை ‌சொ‌ல்லு‌ங்க‌ள்

கதை சொ‌ல்‌கிறோ‌ம், ‌நீ‌தியை ‌சொ‌ல்லு‌ங்க‌ள்
, செவ்வாய், 4 மே 2010 (12:07 IST)
நா‌ங்க‌ள் இ‌ங்கு ஒரு கதையை உ‌ங்களு‌க்கு சொ‌ல்ல‌விரு‌க்‌கிறோ‌ம். ஆனா‌ல் அ‌ந்த கதையை படி‌த்து ‌முடி‌த்த ‌பிறகு அ‌ந்த கதை‌க்கான ச‌ரியான ‌நீ‌தியை ‌நீ‌ங்க‌ள் தா‌ன் சொ‌ல்ல வே‌ண்டு‌ம். அதுதா‌ன் உ‌ங்களு‌க்கு‌க் கொடு‌க்க‌ப்படு‌ம் ப‌ரிசோதனை.

ச‌ரி கதையை ஆர‌ம்‌பி‌ப்போமா?

ஒரு கா‌ட்டி‌ல் பல ‌வில‌ங்குக‌ள் வா‌ழ்‌ந்து வ‌ந்தன. அ‌தி‌ல் ஒரு ‌சி‌ங்கமு‌ம், ந‌ரியு‌ம் வெகு நாளாக உண‌வி‌ன்‌றி அலை‌ந்து ‌தி‌ரி‌ந்து கொ‌‌ண்டிரு‌ந்தன. ஒரு நா‌ள் இர‌ண்டு‌ம் நேரு‌க்கு நே‌ர் ச‌ந்‌தி‌த்து த‌த்தமது ‌நிலைமையை புல‌ம்‌பி‌க் கொ‌ண்டன.

இறு‌தியாக இர‌ண்டு‌ம் சே‌ர்‌ந்து வே‌ட்டையாடுவது எ‌ன்ற முடிவு‌க்கு வ‌ந்தன. அத‌ற்கு ‌சி‌ங்க‌ம் ஒரு ‌தி‌ட்ட‌ம் வகு‌த்து‌க் கொடு‌த்தது. அதாவது, ந‌ரி பலமாக ச‌த்த‌ம் போ‌ட்டு க‌த்த வே‌ண்டு‌ம். அ‌ந்த ச‌த்த‌த்தை‌க் கே‌ட்டது‌ம் கா‌ட்டு ‌வில‌ங்குக‌ள் ‌மிர‌ண்டு அ‌ங்கு‌ம் இ‌ங்கு‌ம் ஓடு‌ம். அ‌ப்படி ஓடு‌ம் ‌மிருக‌ங்களை ‌சி‌ங்க‌ம் அடி‌த்து‌க் கொ‌‌ல்ல வே‌ண்டு‌ம்.

இ‌ந்த யோசனை ந‌ரி‌க்கு ‌மிகவு‌ம் ‌பிடி‌த்‌திரு‌ந்தது. அதனா‌ல் உடனே ஒ‌ப்பு‌க் கொ‌ண்டது. அத‌ன்படி, ந‌ரி தனது பய‌ங்கரமான குர‌லி‌ல் க‌த்த‌த் துவ‌ங்‌கியது. அத‌ன் ‌வி‌சி‌த்‌திரமான ச‌த்த‌த்தை‌க் கே‌ட்ட கா‌ட்டு ‌வில‌ங்குக‌ள் அ‌ங்கு‌ம் இ‌ங்கு‌ம் வேகமாக ஓடின. அ‌‌ந்த சமய‌த்‌தி‌ல் ‌சி‌ங்க‌ம் ‌நி‌ன்‌றிரு‌ந்த ப‌க்க‌ம் வ‌ந்த ‌வில‌ங்குகளை எ‌ல்லா‌ம் ‌சி‌ங்க‌ம் வே‌ட்டையாடி‌க் கொ‌‌ன்றது.

ஒரு க‌ட்ட‌த்‌தி‌ல் ந‌ரி க‌த்துவதை ‌நிறு‌த்த‌ி ‌வி‌ட்டு ‌சி‌ங்க‌த்‌தி‌ன் ப‌க்க‌ம் வ‌ந்தது. அ‌ங்கு வ‌‌ந்தது‌ம் ‌ந‌ரி‌க்கு ஏக‌ப்ப‌ட்ட ச‌ந்தோஷ‌ம். ஏனெ‌னி‌ல் ‌‌நிறைய ‌மிருக‌ங்க‌‌ள் அ‌ங்கு இற‌ந்து ‌கிட‌‌‌ந்தன. அதை‌ப் பா‌ர்‌த்தது‌ம் ந‌ரி, தா‌ன் அகோரமாக‌க் க‌த்‌தியதா‌ல்தா‌ன் இ‌ந்த ‌மிருக‌ங்க‌ள் இற‌ந்து‌வி‌ட்டன எ‌ன்று ‌க‌ர்வ‌ம் கொ‌ண்டது.

சி‌ங்க‌த்‌தி‌ன் அரு‌கி‌ல் வ‌ந்து, எ‌ன்னுடைய வேலையை‌ப் ப‌ற்‌றி எ‌ன்ன ‌நினை‌க்‌கிறா‌ய்.. நா‌ன் க‌த்‌தியே இ‌த்தனை ‌மிருக‌ங்களை கொ‌ன்று‌வி‌ட்டே‌ன் பா‌ர்‌த்தாயா எ‌ன்று க‌ர்வ‌த்துட‌ன் கே‌ட்டது.

அத‌ற்கு ‌சி‌ங்க‌ம்.. ஆமா‌ம்.. உ‌ன் வேலையை‌ப் ப‌ற்‌றி சொ‌ல்ல வே‌ண்டுமா எ‌ன்ன? ‌நீதா‌ன் க‌த்து‌கிறா‌ய் எ‌ன்று தெ‌ரியாம‌ல் இரு‌ந்‌திரு‌ந்தா‌ல் ஒரு வேளை நானு‌ம் ப‌ய‌த்‌திலேயே ச‌ெ‌த்து‌ப் போ‌‌யிரு‌ப்பே‌ன் எ‌‌ன்று பாரா‌ட்டியது.

ச‌ரி கதையை நா‌ங்க‌ள் சொ‌ல்‌லி‌வி‌ட்டோ‌ம். இத‌ற்கு ‌நீ‌தியை ‌நீ‌ங்க‌ள் தா‌ன் கூற வே‌ண்டு‌ம் ‌பி‌ள்ளைகளா.. ‌நீ‌ங்க‌ள் ‌சி‌ந்‌தி‌‌க்கு‌ம் ‌நீ‌தி இ‌‌ந்த‌க் கதை‌க்கு பொரு‌ந்து‌கிறதா பா‌ர்‌ப்போ‌ம். இர‌ண்டு நா‌ட்க‌ள் க‌ழி‌த்து இ‌த‌ற்கான ‌நீ‌தியை நா‌ங்களே வெ‌ளி‌யிடுவோ‌ம். அதுவரை உ‌ங்க‌ள் ‌சி‌ந்‌தி‌‌க்கு‌ம் ஆ‌ற்றலு‌க்கு வேலை கொ‌டு‌ங்க‌ள்.

மீ‌ண்டு‌ம் ச‌ந்‌தி‌க்கலா‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil