Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிக்பாஸ் வீட்டில் பயங்கர சண்டை: ஶ்ரீசாந்த் மருத்துவமனையில் அனுமதி

பிக்பாஸ் வீட்டில் பயங்கர சண்டை: ஶ்ரீசாந்த் மருத்துவமனையில் அனுமதி
, செவ்வாய், 4 டிசம்பர் 2018 (10:41 IST)
பிரபல கிரிக்கெட் வீரர் ஶ்ரீசாந்த், ஹிந்தி தொலைக்காட்சி நடத்தி வரும் பிக்பாஸ் 12வது சீசனில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மிக  இயல்பாக காணப்படும், அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.
அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் ஆர்மி ஆரம்பித்து ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று  ஸ்ரீசாந்த், சுர்பி ரானா, என்பவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சண்டை முற்றியதால் ஸ்ரீசாந்த் கடும் கோபத்தில் பாத்ரூம் சென்று  கதவை மூடிக்கொண்டார். அவரை வெளியில் கொண்டு வர பலர் முயன்றும் முடியவில்லை.
 
பாத்ரூம் சுவற்றில் ஸ்ரீசாந்த் கோபத்தில் மோதிக்கொண்டுள்ளார், அதனால் அவரின் தலையில் வலி ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோழியை அடித்து நொறுக்கிய நடிகர்