Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலியல் பலாத்காரங்களை தடுக்க ராக்கி சாவந்த் யோசனை

பாலியல் பலாத்காரங்களை தடுக்க ராக்கி சாவந்த் யோசனை
, புதன், 31 அக்டோபர் 2018 (11:31 IST)
இந்தியாவில் பாலியல் பலாத்காரங்களை தடுக்க வேண்டும் என்றால் திரைப்படங்களில் இடம் பெறும் பலாத்கார காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார்.

சஜித்கான் மீ டூ வில் சிக்கியதால் அவர் டைரக்டு செய்வதாக இருந்த ஹவுஸ்புல்–4 படத்தில் இருந்து அக்‌ஷய்குமார் விலகியுள்ளார்.   இது தொடர்பா கருத்து தெரிவித்த போது தான் இந்த விஷயத்தை ராக்கி சாவந்த் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நானா படேகர், சஜித்கான் இருவருமே அப்பாவிகள். பாலியல் புகாரில் சிக்கி உள்ள அலோக்நாத் வயதானவர். இந்த வயதில் அவர் மீது செக்ஸ் புகார் கூறுவது நம்பும்படி இல்லை. அவர் ரொம்ப நல்லவர். பாலியல் புகார் கூறப்பட்ட வின்டா நந்தா உள்ளிட்ட எல்லோருமே நல்லவர்கள்தான். திரையுலகில் பெண்கள்தான் மோசமான தகவல்களை பரப்புகிறார்கள். தனுஸ்ரீதத்தாவை யாரும் ஆதரிக்காதீர். இந்தியாவில் பாலியல் பலாத்காரங்களை நிறுத்த வேண்டும் என்றால் திரைப்படங்களில் இடம் பெறும் பலாத்கார காட்சிகளுக்கு தடை விதிக்க
வேண்டும்.’’ என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அலார்ட் சமந்தா!