Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல நடிகரை படுக்கைக்கு அழைத்த ஆண் தயாரிப்பாளர்

பிரபல நடிகரை படுக்கைக்கு அழைத்த ஆண் தயாரிப்பாளர்
, திங்கள், 22 அக்டோபர் 2018 (16:48 IST)
பிரபல தயாரிப்பாளர் முஸ்தாக் ஷேக் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகர் ராகுல் ராஜ் சிங் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 
 
அண்மைக் காலமாக ஆண் பிரபலங்கள் மீது பெண் நடிகைகள் பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர். ஆனால் தற்போது ஆண் நடிகரை ஒரு ஆணே படுக்கைக்கு அழைத்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.
 
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகர் ராகுல் ராஜ் சிங் தயாரிப்பாளரும், எழுத்தாளருமான முஸ்தாக் ஷேக் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். 
 
அதில் அவர் கூறியிருப்பது, நான் 2004ம் வருடம் கிராசிம் மிஸ்டர் இந்தியா மாடலாக தேர்வானேன். அதற்கு பிறகு  இரண்டு ஆண்டுகள் கழித்து பட வாய்பிற்காக தயாரிப்பாளர் முஸ்தாக் ஷேக்கை சந்தித்தேன். அப்போது அவர் என்னை பார்த்து இம்பிரஸ் ஆனார்.  
 
பிறகு ஒரு நாள் இரவு 11 மணிக்கு என்னை அவர் வீட்டிற்கு அழைத்தார். அங்கு அவர் வீட்டில் ஒரேயொரு அறை, படுக்கை மட்டுமே இருந்தது. அப்போது  நான் உனக்கு ஒன்று செய்யப் போகிறேன் என்று சொல்லி அதில் நீ மிகுந்த சந்தோஷம் அடைவாய் என்றார். அதை கேட்டு எனக்கு பயம் வந்துவிட்டது. நான் உங்களின் நண்பன். எல்லா உறவுகளும் செக்ஸை அடிப்படையாக கொண்டது இல்லை என்று நான் கூறினேன். அதற்கு அவரோ, அடுத்த முறை நீ தயாராகிவிடுவாய் என்றார். அதன் பிறகு அந்த பட வாய்ப்பையே நான் இழக்க நேரிட்டது.
 
மேலும் மாதா கி சவ்கி என்ற நிகழ்ச்சியில் என்னை ஒப்பந்தம் செய்தார்கள். அந்த நிகழ்ச்சியில் நான் தொடர்ந்து நடிக்கவேண்டுமென்றால்  நான் அவருடன் படுக்கையை பகிர வேண்டும் என்றார் முஸ்தாக். நான் மறுக்கவே என்னை அந்த நிகழ்ச்சியில் இருந்து நீக்கினார்கள். 
 
தயாரிப்பாளர் முஸ்தாக்கின் இந்த செயலால் தான் நான் சின்னத்திரையை விட்டு விலகினேன். வாய்ப்புக்காக யாருடனும் படுக்கையை பகிர முடியாது என  நடிகர் ராகுல் ராஜ் சிங் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அர்ஜுன் மீதான பாலியல் புகார்: நிபுணன் இயக்குனர் மறுப்பு