Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கால பைரவ‌ர் ‌சிற‌ப்பு எ‌ன்ன?

கால பைரவ‌ர் ‌சிற‌ப்பு எ‌ன்ன?
, வெள்ளி, 29 ஜூலை 2011 (21:07 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: வெளி மாநிலங்களில் கால பைரவர் என்று சொல்கிறார்கள். அதன் சிறப்பு என்ன?

ஜோ‌திர‌த்னமுனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: பைரவர்களுடைய வகைகளில் வரக்கூடியவர்தான் கால பைரவர். மன்னர்களுடைய வழிபாட்டில் பெரிதும் கால பைரவர் இருந்தார். சங்க காலத்தில் பார்த்தால், மன்னர்களுக்கென்று கால பைரவர் வழிபாடு தனியாக இருந்தது. அவர் எல்லா காலத்தையும் மாற்றக்கூடியவர். எந்தக் காலத்தில், எந்த நேரத்தில் அரசன் சிலவற்றை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பவர். வெளி மாநிலங்களில் மட்டுமல்ல, சிதம்பரம் நடராஜர் கோயிலிலும் கால பைரவர் இருக்கிறார்.

கால பைரவரின் சிறப்பு என்னவென்றால், ஒருவருக்கு எந்த கெட்ட நேரம் நடந்தாலும் அதனை மாற்றக்கூடியவர். முத்திரைகள், தரிக்கக்கூடிய ஆயுதங்கள் இதெல்லாம் ஒவ்வொரு பைரவருக்கும் வித்யாசப்படும். அதனால் கால பைரவர் கொஞ்சம் உக்கிரமாக இருந்து எல்லாவற்றையும் செய்யக்கூடியவர்.

Share this Story:

Follow Webdunia tamil